குழந்தைகள் தின வாழ்த்து

❣️சிங்கார சிட்டுகளுக்கு இனிய குழந்தைகள் தின வாழ்த்துகள் 💐💐

❣️குழந்தைகள் என்றாலே 
உள்ளூர ஒரு குதூகலம் 
மனசெல்லாம் மகிழ்ச்சி 
பூக்கள் பூத்துக் குலுங்கும் 
ஆத்மார்த்தமான உலகம் 
அலாதியான உலகம் !! 

❣️கள்ளங் கபடமற்ற 
விருப்பு வெறுப்புக்கு 
அப்பாற்பட்டவர்கள்!!

❣️அழகில் தேவதைகளாய் 
அன்பின் அர்த்தம் 
சொல்ல வந்தவர்கள் !!

❣️ஆனந்தத்தின் முகவரியாய் வந்த
ஆணவமில்லா அதிகாரம் இவர்கள் !!

❣️இதயம் நிறைந்த மன்னவர்களாய்
இன்பத்தின் இலக்கணம் 
கற்றுத் தந்தவர்கள் !!

❣️ஈகையில் இவர்கள் போல் இல்லை 
ஈடில்லா இம்சை அரசர்களும் 
இவர்களே !!

❣️உற்சாகத்தின் பிறப்பிடமாய் 
உலகம் போற்றும் உள்ளம் 
கொண்ட நாயகர்கள் !!

❣️ஊக்கம் தரும் உத்வேகமாய் 
ஊர் போற்றும் உள்ளம் 
கொண்டவர்கள் !!

❣️எண்ணத்தில் வண்ணம் கொண்டு 
எல்லாமும் ஏற்றம் காண 
கனா காணும் காவியங்கள் !!

❣️ஐயம் என்பதை அகராதியில் தகர்த்து 
ஐம்பூதங்களின் ஆசி பெற்றவர்கள் !!

❣️ஒற்றுமையின் ஒப்பற்ற உதரணமாக 
ஓதுவதில் ஒருநாளும் 
சலைத்திடாத தீரர்கள் இவர்கள் !!

❣️நிலவும் பாட்டியை 
வெட்ட வெளியில் நின்று 
விரல் நீட்டி தொட்டு விடும் 
விந்தை மனம் 
கொண்டவர்கள் குழந்தைகள் !!

❣️காற்றை கையில் பிடித்து 
வண்ணத்துப்பூச்சியின் 
வர்ணமெடுத்து 
வானவில்லுக்கு வர்ணம் பூசிடும் 
விசித்திர மனம் 
கொண்டவர்கள் குழந்தைகள் !!

❣️தோழனின் பின் சட்டை பிடித்து 
இரயில் வண்டி பயணத்தில் 
உலகையே வலம் வர நினைக்கும் 
பால் மனம் 
கொண்டவர்கள் குழந்தைகள் !!

❣️கல்லோடும் மண்ணோடும் 
ஒருநூறு நட்புக் கதைகள் 
பேசிப்பேசி குதூகலிக்கும் 
குறும்பு மனம் 
கொண்டவர்கள் குழந்தைகள் !!

❣️நிஜமாய் சிரித்து 
நிஜமாய் அழுது 
நிஜங்களுக்குள்ளே வாழும் 
சுவாரஸ்யமான நாவல் 
இந்த குழந்தைகள்!!

❣️முல்லை மலராய் 
வெள்ளை மனம் 
வஞ்சகம் இல்லா 
பிஞ்சு மனம்!!

❣️தினம் ஒரு பாடம் 
சொல்லில் தரும் ஆசான்கள் 
வண்ண வண்ண பூக்கள் 
வாசம் மிக்க பூக்கள்!! 

❣️புன்னகை சொர்க்கம் ஒன்றை 
பூமியில் காண வேண்டுமா 
வகுப்பறைக்குள் வந்து பாருங்கள்!!

❣️மொகல்  தோட்டத்து 
வாசமிக்க ரோஜாக்களாய் 
வண்ணங்களால் 
கண்களுக்கு விருந்தளித்து 
வண்டுகளின் ரீங்காரமென 
மழலை ததும்பிடும் 
கிளிப் பேச்சுக்கள் 
மெய் சிலிர்த்து போகலாம்!! 

❣️ குழந்தைகளை குழந்தைகளாகவே 
பார்ப்போம்;  நேசிப்போம் ;
இன்னும் இன்னும் அதிகதிகமாய்!!!!!!






Comments

Post a Comment

Popular posts from this blog

Report of my Exploratory Research

My experience during this pandemic situation

GRADATION ON ENGLISH TEXT BOOKS OF CLASS III(TAMILNADU)