என் அன்னைக்கு சமர்ப்பணம்
❣️என் அன்னைக்கு ஒரு தினம் அன்னையர் தினம் ❣️அழகில் தேவதை - நீ அன்பின் ஆரம்பம் - நீ அடக்கத்தின் அந்தம் - நீ வீரத்தின் விதை- நீ தீரத்தின் திமிர்- நீ ❣️உன் புகழ் சொல்லிட ஒருநாள் போதாது என் அன்னையே ! ❣️உனக்கோர் கவி மாலை தொடுத்திட கடலிடம் சென்று முத்துக்கள் கடனாய்க் கேட்டேன் வானத்திடம் சென்று விண்மீன்கள் கடனாய்க் கேட்டேன் காற்றிடம் சற்று கானம் கடனாய்க் கேட்டேன் பூமாதேவியிடம் சில வைரங்கள் கடனாய்க் கேட்டேன் அனலிடம் அக்னியின் மணம் கடனாய்க் கேட்டேன் பஞ்ச் பூதங்களிடமும் கடன் பெற்றேன் போதவில்லை அம்மா உன் புகழ் மாலை புனைந்திட ! ❣️ஒரு துளி உயிரணுவைப் பெற்று உதிரத்தால் உருமாற்றினாயே உதிரத்தையே உணவாக்கினாயே எத்தனை பெரும் அற்புதம் செய்தவள் நீ ! ❣️எனை சுமப்பது வலி என்று தெரிந்தும் கோவில் , குளம் ஏறி வரம் பெற்று வலியறியாமல் வயிற்றில் பத்து மாதமும் மார்புக்கூட்டினுள் மிச்சக்காலமும் ...