கொரானாவின் கோரத்தில் சிக்கிய ஒரு உயிரின் உண்மைக் கதை
🩸தாயின் அரவணைப்பில் பாலூட்டி சீராட்டி வளர்க்க வேண்டிய பிள்ளை சூழ்நிலையால் தாய்மாமன் வீட்டில் விடப்பட்டான் 🩸பிழைப்புக்காய் பெற்றோர் அண்டை மாநிலம் செல்லவே அன்பு ,பாசம், அக்கறை , அரவணைப்பை இழந்தவனாய் இரண்டு வயது முதல் தன்னிச்சையாக வளர ஆரம்பித்தான் 🩸தன்னிலை தன் பிள்ளைக்கு வேண்டாம் என பெற்றோர் நினைக்கவே தாய்மாமன் வீடே நிரந்தரமானது 🩸நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அரசுப் பள்ளியும் , ஆசிரியர்களும் வளர்த்தெடுக்கவே படிப்பு ,பண்பு ,விளையாட்டு என அனைத்திலும் பெற்றோரும், வளர்த்தவர்களும் பள்ளியும், ஊராரும் பெருமைப்படும் வகையில் கெட்டிக்காரனாய் வளர்ந்தான் 🩸பட்டாம்பூச்சியாய் சிறகடித்து பறக்க வேண்டிய பள்ளிப் பருவத்தில் சில நேரம் வீட்டுச் சமையலும் அவனுடையதே அதிகாலை எழுந்து ஓட்டமும் நடையுமாய் ஓடிச்சென்று ஐந்து ரூபாய்க்கும் பத்து ரூபாய்க்கும் தோட்டத்து வேலை செய்து மீண்டும் ஓடி வந...