Posts

Showing posts from July, 2021

கணினி உலகம்

Image
🌍நவநாகரீகத்தின்  காவியத்தலைவனுக்கு  ஒரு நன்றி சமர்ப்பணமாய் ... 🌍அன்றொரு காலத்தில்  மேலைநாடுகளில் மட்டும்  சிங்காரமாய் வலம் வந்த  உனை எட்டிப் பிடிக்க  நினைத்த எங்களின்  கனவுகளுக்கு சிறகுகள்  தந்ததின் விளைவாய்  கனவு உருவம் நனவாகி  இன்று  பட்டி தொட்டியெல்லாம்  பவனி வருகின்றாய் கம்பீர நடைபோட்டு  கணினி என்னும் பெயரில் .. 🌍இனம், மொழி தாண்டி  இதயங்கள் மட்டுமல்ல  கடல் கடந்து கண்டங்களும் இணைந்து உலகமே  உம் ஒற்றைக் குடையின் கீழ்  இணைந்து நிற்பது  நீ தந்த இணையமெனும்  இணைப்பாலே !! 🌍முகம் தெரியாத உறவுகளுடன்  உள்ளத்து எண்ணங்களை  பக்குவமாய் பகிர்ந்திட  முகநூல் தந்தாய் !! 🌍பரந்து விரிந்த பாரவையும்  இன்று கணினியெனும்  உன் சிறு பெட்டிக்குள்  அடக்கி விட்டாயே !! 🌍நீ இன்றி ஏதுமில்லை  நீ இல்லாத துறையும்  எதுவுமில்லை  மருத்துவம் தொடங்கி  மளிகைக்கடை வரை  உன் ஆட்சியே !! கோட்டை தொடங்கி  குக்கிராமம் வரை  ஆள்வதும் நீயே !! 🌍பல்துறைகளில் பய...

நம்மாழ்வாரின் நற்சிந்தனை

இயற்கையை நேசித்து,  இயற்கையை சுவாசித்து,  இயற்கையின் இன்பத்தில் திளைத்து , ஈரைந்து மாதங்கள் மட்டுமே அன்னையின் கரு வாழ்நாளின் மிச்ச காலமெல்லாம் இயற்கை அன்னையின் மடி என்பதை அனுபவித்து,  நிலையில்லா உலகில் நிஜம் இல்லாப் பொழுதுகளில் நான் நிற்பதும் நடப்பதும் இயற்கை கருணை மட்டுமே என்று உணர்ந்து,  எல்லாமும் இயற்கைதான் என்று வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து உலகிற்கு உணர்த்திட  காவிரியின் மடியில் பிறந்து, காவிரி நதியில் விளையாடி,  காவிரிப்படுகையில் காலம் கழித்து,  இறுதியில் காவிரித் தாயின் மடியிலே தன் உயிரையும் துறந்த இயற்கை போராளி. வாழ்நாளின் மொத்த காலத்தையும் இயற்கை விவசாயத்தை மேம்படுத்தவும், மரபுசார் வாழ்வியலை பாதுகாக்கவும், மீட்டெடுக்கவும் தஞ்சை மண்ணில் திருக்காட்டுப்பள்ளி என்னும் இடத்தில் இளங்காடு எனும் சிற்றூரில் விவசாயக் குடும்பத்தில் பிறந்து, தஞ்சை மண்ணின் மைந்தனாய் தமிழகத்தின் மண்ணையும் மகத்துவத்தையும் காத்து இன்று மரபின் தந்தை என எல்லோராலும் போற்றப்படும் பெரும் மதிப்பிற்குரியவர்  நம் நெஞ்சத்தில் நிறைந்தவர்  நம்மாழ்வார் என்னும் பேராண்மை.  விவச...