Posts

Showing posts from December, 2021

புத்தாண்டே வருக !! வருக!!

Image
🌺🌺🌺கருங்குயில் கானம் பாட  புல்லாங்குழல் பூபாளம் இசைக்க  எழில்மிகு மயிலினங்கள் நடனமாட  வண்ணம் கொண்ட பட்டாம்பூச்சிகள்  சிங்கார சிறகசைக்க  கொட்டும் பனிமழையிலும்  மலைச் சாரல் மெல்ல வந்து தாலாட்ட  கடலைகள் அள்ளி அணைத்திட  ஆதவன் கதிர் வீசி அழைத்திட  குழந்தைகள் குதூகலமாய்  ஆர்ப்பரித்து ஆரவாரம் செய்திட  இயற்கை அன்னையின்  இன்பமான அழைப்பினில்  இதமாய் மகிழ்ந்திருக்க  உனை வாழ்த்தி வரவேற்கிறோம்  புத்தாண்டே வருக வருக !!! 💐💐💐 🌺🌺🌺பழையன கழிதலும்  புதியன புகுதலும்  என்பதில் எள்ளளவும் ஐயமின்றி   பழைய சிந்தனைகள் களைந்து  புதிய சிந்தனைகள்   எங்களில்  பிறந்திட  மனசெல்லாம் மத்தாப்பு பூக்கள் பூக்க  மனதார உன்னை வரவேற்கிறோம்  புத்தாண்டே வருக வருக !!! 💐💐💐 🌺🌺🌺மதங்கள் கடந்து  மனங்களை நேசிக்கும்  மானிட பண்பு இங்கு  பெருகி  திரும்பும் திசையெங்கும் மனித நேயம் மலர்ந்திட  மகிழ்வோடு உன்னை  வரவேற்கிறோம்  புத்தாண்டே வருக வருக !!! 💐💐?...

தேசிய விவசாயிகள் தினம்

Image
🌾🌾வைகறை விடியலில்  புது நாள் பூபாளராகம்  இசைத்து அழைத்திட   சோம்பல் முறித்து  சட்டென்று எழுந்து  வயலுக்கு விரைபவன்  நம் விவசாயி 🌿🌿🌿 🌾🌾காலைத் தென்றல் சீராட்ட  நெல்லோடும் புல்லோடும்  நலம் விசாரித்து  வரப்போடு கதைகள் பேசி  விளைநிலம் இறையென  தொட்டு வணங்கி  வியர்வை காணிக்கை  படைத்து  உளம் மகிழ்பவன்  நம் விவசாயி 🌿🌿🌿 🌾🌾ஊருக்கெல்லாம் உணவளிக்கும்  இவனின் உணவு  சில நேரங்களில்  அரைவயிற்றுக் கஞ்சி  பலநேரங்களில்  முந்தைய நாளின்  நீராகாரத்தோடு  முடிந்து விடும் 🌿🌿🌿 🌾🌾தான் பெற்ற பிள்ளை மறந்து  வளர்ப்பு பிள்ளைகளான  வயல் நாற்றுகளோடு  மொத்த பொழுதையும் கழிப்பதில்  மனம் நிறைபவன்  நம் விவசாயி 🌿🌿🌿 🌾🌾வாடிய பயிரை கண்ட போதெல்லாம்  வாடிய வள்ளலாரின்  பரம்பரையில் வந்தவன் அல்லவா  வாடிய பயிரின்  மனம் அறிந்தவனாய்  நீர் பாய்ச்சி  பாசத்தோடு தலைக்கோதி  தேவை நிறைவு செய்து  நெஞ்சம் நெகிழ்பவன் ...