மகளிர் தின வாழ்த்துகள்


வஞ்சியவள்வரமே!!! 
 
🌺அழகில் தேவதையாய் 
அன்பின் ஆரம்பமாய் 
வீரத்தின் விதையாய் 
தீரத்தின் திமிராய் 
மழைச் சாரலாய் 
சீறும் புயலாய் 
கிழக்குச் சுடர் வானமாய்
புகழ்மிக்க திருத்தலாய் 
இந்த வஞ்சியவள் வரமே!!!! 

🌺ஒரு துளி உயிரணுவைப் பெற்று 
உதிரத்தால் உருமாற்றி 
 உருவாக்கும் உயர் வித்தகி 
ஈரைந்து மாதங்கள் கருவினில்
 மிச்சகாலமெல்லாம் 
மார்புக்கூட்டினுள் வைத்து
மகிழ்ந்திருக்கும் தவம் 
இந்தவஞ்சியவள் வரமே!!!!  

🌺அன்பெனும் வார்த்தைக்கு 
அகராதி தந்து 
அதீத சக்தியால் 
அகிலம் ஆளும் அத்தியாயம் 
வெயில் மழை பாராது 
கல்லும் முள்ளும் கடந்து 
துன்பங்களை தூசியாக்கும் 
வல்லமை 
இந்தவஞ்சியவள் வரமே!!!! 

🌺வாடி நிற்பவர்களுக்கு 
வாழ்க்கை விடியல்களை 
பிரசவிக்கும் 
சுடர் மிகு வைகறை வானம் 
பொல்லார் கொடுமை 
கண்டு பொங்குகையில் 
புயலைக்கூட தோழனாக்கும் 
பூமகள் 
இந்தவஞ்சியவள் வரமே!!!! 

🌺துணைகண்டு மனைகண்டு 
மண்ணில் மகளிர் மாண்பு 
காத்து நிற்கும் மாதவம் 
உரிப்பதற்கும் எரிப்பதற்கும் 
விறகல்ல 
விதைகளை நல்விருட்சங்களாக்கும் 
வியத்தகு விந்தை கற்றவள் 
இந்தவஞ்சியவள் வரமே!!!! 

🌺இடிகள் பலவும் தாங்கிய 
இன்முகத்தாள் 
ஞாலமெனும் ஆலயத்தில் 
ஞான ஒளியாய் 
மதம் பிடித்த மனிதனுக்கு 
மறக்காமல் மனிதம்
கற்றுத் தரும் மாமேதை 
இந்தவஞ்சியவள் வரமே!!!! 

🌺விறகாய் சருகாய் 
வெந்து தனியாமல் 
வெற்றுத் தோட்டத்திலும் 
வைரமணி கண்டெடுத்து
புலர்கின்ற விடியல்களை 
பூபாள ராகம் இசைத்து 
நடைதோறும் நம்பிக்கை 
காற்றை விதைக்கும் 
இந்தவஞ்சியவள் வரமே!!!! 

🌺தன்னேரில்லா தகைமையாய் 
தரணியில் தமிழ் போல் 
தலைநிமிர்ந்து நிற்கும் 
தங்கமகள் 
இந்த வஞ்சியவள் வரமே!!!! 

🌺வரமாய் வந்த மகளிருக்கு 
மகளிர் தின வாழ்த்துகள் 💐💐💐






Comments

  1. அருமை ! மகளிர் தின வாழ்த்துக்கள்!!@

    ReplyDelete
  2. அருமை மா !!!மங்கையராக பிறப்பதற்கு மாதவம் செய்திட வேண்டுமம்மா💐💐💐💐

    ReplyDelete
  3. அருமையான பதிவு.மகளிர் தின நல்வாழ்த்துக்கள் சகோ

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Report of my Exploratory Research

My experience during this pandemic situation

GRADATION ON ENGLISH TEXT BOOKS OF CLASS III(TAMILNADU)