என் செல்ல மகளுக்கு.....

மகள்கள் ❣️ தின வாழ்த்துகள் 💐💐 
என் அன்பு மகளுக்கு 
மகள்கள் தின வாழ்த்துகள்...

❣️எல்லோர்க்கும் வாய்ப்பதில்லை 
வரமாய் ஒருத்தி 
எனக்கு வாய்த்தாள் 
மகளெனும் வரமாய் !!!!!

❣️புத்தம் புதிதாய் பூத்த பூ இவள் 
வாடா மலராய் வந்த வசந்தம் இவள் 
புன்னகைமாறா பூ மகள் இவள் 

❣️பகலில் பகலவனின் ஒளி இவள் 
இரவில் வெண்ணிலாவின் 
பிரகாசம் இவள் 
 என் வாழ்வின் 
அர்த்தமாய் வந்தவள் இவள்


❣️ஐந்து வருடங்கள் 
மருத்துவத்தோடு போராட்டமா 
விதியோடு போராட்டமா 
தெரியவில்லை 
போராட்டங்கள் பல கடந்து 
நான் பெற்றெடுத்த 
பொக்கிஷம் இவள்!!!!

❣️என் செல்ல மகள் பிறந்தாள் 
எங்கள் வீட்டு மகாலஷ்மியாய் !!!
அதனாலே அவளுக்கு 
மகாலஷ்மி என்று பெயரிட்டேன் 

❣️பாசத்தில் இவள் போல் 
எவரும் இல்லை 
என் வீட்டு இளவரசியும் இவளே!!!
என் மனம் ஆளும் 
மகாராணியும் இவளே!!!

❣️உன் அழுகுரல் கேட்கும் முன்னே 
உனை அள்ளி அணைத்து 
அமுதூட்டிய நாட்கள்  
நீங்காத நினைவுகளாய்.... 

❣️தட்டுத்தடுமாறி நீ எழுகையில் 
மெல்ல சறுக்கிய உன் கால்களால் 
பூமித்தாய் பூரித்து நின்றாள் 
உன் பூவிதழ் முத்தம் 
பெற்றதையெண்ணி....... 

❣️விதியின் வழியில் 
உன்னைப் பிரிந்த 
 ஓராண்டு காலம்  
தவறவிட்ட தருணங்களாய் 
எனை ரணமாக்கிய காலம் 
உன் பாசம் எனை 
கட்டி இழுத்திட உன்னோடு 
மீண்டும் பயணம்
என் வாழ்வின் 
வளர்ச்சிகள் அத்தனையுமே 
நீ பிறந்த பின் தானே 
என் தேவதையே !!!!


❣️பசித்திருக்கும் பொழுதுகளில் 
பந்தியும் வைப்பாள் இவள் !!!
வேலைப்பளு கொண்ட நேரத்தில் 
பகிர்ந்தும் கொள்வாள் இவள் !!!

❣️ஆண்டுகள் பல தவமிருந்து 
வரமாய் வந்தவள் 
வாஞ்சையும்  தந்தவள் 
என் அன்னை எட்டி இருக்க 
அன்னையாய் அருகிருந்து 
அன்பு செய்யும் 
அழகு இராட்சசி இவள் !!!

❣️என் தோள் கடந்து 
வளர்ந்து நிற்கும் இவள் 
என் வயிற்றின் கருமணி !
என் உயிரின் கண்மணி !

❣️நடை கற்றுத் தந்த எனக்கு 
உடை வாங்கித் தந்த எனக்கு 
அடையாளமாய் அவள் அளிக்கும் 
அன்பு முத்தங்கள் 
ஆகப் பெரும் பரிசு 

❣️அம்மா என்று நீ அழைக்கும் 
ஒற்றை வார்த்தைக்கு 
ஆயுள் கைதியடி - நான் 

❣️பொன் சேர்க்கக் தேவையில்லை 
பொருள் சேர்க்கக் தேவையில்லை 
பொன்மகளே!!!! உனை 
ஊர்ப் போற்ற வளர்ப்பதே 
தவமென வாழ்கிறேன் 
என் செல்லமே!!! 

❣️உன் விடுமுறை நாளில் 
என் பள்ளி நாளில் 
என் தாயாய் நீ மாறி 
உன் குழந்தையாய் 
எனை பள்ளிக்கு அனுப்பிடும்
 சுகத்தை தினம் தினம் 
யாசிக்கிறேன் 
என் பூங்கிளியே!!!! 

❣️அன்னையெனும் பதவி தந்த 
அற்புதம் நீ எனக்கு 
பிள்ளையாய் மாறும் போது 
பெரும் வரம் நீ எனக்கு 
கொஞ்சி மகிழும் போது 
அலைகடல் நீ எனக்கு 
அள்ளி அணைத்திடும் போது 
தென்றலடி நீ எனக்கு 

❣️ஒருநாள் என்னைவிட்டு 
உன் அகம் செல்வாய் நீ 
ஒரு கணமும் உனைப் பிரியாது 
என் உயிர்நாடி  தங்கமகளே!!!!
 
❣️உன் நிழலாய் இருப்பேன் 
உன் வழியாய் இருப்பேன் 
உன் வசந்தமாய் இருப்பேன் 

❣️ மகிழ்ந்திரு
என் செல்ல மகளே!!!!
வாழ்வெல்லாம் வசந்தங்கள் 
உனை சூழ்ந்திட 
வாழ்த்துக்கள் 
என் உயிரானவளே!!!!!.........💐💐💐



Comments

  1. மகள்களை பெற்ற அம்மாக்களுக்கு மட்டுமே கிடைத்த பெருவரம் இந்த அன்பு... கொடுத்துவைத்தவள் தோழி நீ...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தோழி. எனைக் கடந்து அவள் அதிகம் நேசிப்பது உன்னையே

      Delete
  2. 🌹🌹அம்மா &மகள் ❤❤வாழ்க. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. Replies
    1. நன்றி என் இனிய தோழியே

      Delete
    2. அம்மா & மகள்என்றும் அன்புடன் இருக்க வாழ்த்துக்கள்

      Delete
    3. வாழ்த்துக்கு
      மிக்க நன்றி 🙏

      Delete
  4. அம்மக்களால் மட்டுமே உணர முடியும் தாய்மையின் பெருமையை அழகாய் வார்த்தைப்படுத்தியிருகாய் சகோதரி. உன்னைப் போல் உன் மகளும், உன் மகள் போல் உன் கவியும் அழகு. சந்தோஷங்களும், மனநிறைவும் வாழ்வில் எப்போதும் பெற்றிட மனதார வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துகளுக்கு நன்றி 🙏🙏

      Delete
  5. அருமை..அருமை நட்பே

    ReplyDelete
    Replies
    1. நன்றி. மிக்க மகிழ்ச்சி

      Delete
  6. Belated wishes...
    Nice to see ur feel as words.
    Wish u happy life of whole life...

    ReplyDelete
  7. Super ma
    Valga valamudan MAHALAKSHMI
    MANY MORE HAPPY RETURNS OF THE DAY DEAR
    BY B.SARADHA MEENA

    ReplyDelete
  8. மிக மிக சிறப்பு மிக்க கவிதை இது.
    அம்மாவே மகளாய் பிறந்த ஒரு வாரம் உங்களுக்கு கிடைத்துள்ளது. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. கவிதை மிகவும் அருமை..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Report of my Exploratory Research

My experience during this pandemic situation

GRADATION ON ENGLISH TEXT BOOKS OF CLASS III(TAMILNADU)