உலக பூமி தினம் ஏப்ரல் 22

🌱அனுதினமும் உம் துதி சொல்ல 
     வேண்டிய நாங்கள் 
      வருடத்தில் ஒரு நாள் 
      உமை நினைக்க ஏப்ரல் 22 
      உலக பூமி தினம்!  
🌷 நீ தந்த இயற்கையின் 
   இன்பத்தில் திளைத்திட இந்த
   ஒரு ஜென்மம் போதாது 
   🌷ஈரைந்து மாதங்கள் மட்டுமே 
   என் அன்னையின் கருவில் 
   வாழ்நாளின் மிச்ச காலமெல்லாம் 
   உன் மடி மீது தானே பூமா தேவியே!
  🌷 ஒன்றா இரண்டா ஒரு கோடி 
   நன்மைகள் அல்லவா! நீ தந்தது 
   🌷நிலையில்லா உலகில் 
  நிஜமில்லா பொழுதுகளில் நான் 
  நிற்பது நடப்பதும் _  நீ என்னைத் 
  தாங்குவதால் தானே தரணித்தாயே!
 

🌷அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல 
  என வாழ்வுக்கு இலக்கணம் தந்த 
  வள்ளுவருக்கு வரிகள் தந்தாயே!
  🌷உறவுகளோடு உள்ளம் மகிழ 
  சுவாசம் தந்தாயே!
 🌷 அடுக்கு மாடிகளில் ஆடம்பரமாய் 
  வாழ ஆயுள் தந்தாயே!

  அத்தனையும் மறந்தோம் 
                            பூமித்தாயே !

🌱நவீனமாகிப்போன நாகரிகத்தில்     நெகிழியால் உன் நெஞ்சில் 
                         உதைத்தோம் 
 🌱குப்பைகளால் உன் 
                         குறுக்கொடித்தோம் 
🌱வேதிக்கழிவுகளால் உன் 
  வேரறுக்க நினைத்தோம் 

🌱பணமே எல்லாமும் ஆன கலிகாலத்தில் - நீ 
கற்றுக் கொடுத்த பண்புகளை  
                       மறந்தோம்!
 🌱மனித மனம் குறுகி 
உனைத் துண்டாடும் போது 
உள்ளம் உருக்குலைந்திடும் 
                          புவித்தாயே! 
🌱அகிலமே ஆண்டாலும்,
அடங்கப்போவது என்னவோ
உன் ஆறடிக்குள் தானே!
 
மன்னித்து விடும் மகத்துவமே!
 
🌱என் வரும் தலைமுறை காத்திட 
உன் அருமை உணர்ந்து 
மரங்களால் உனை அலங்கரித்து 
மாசற்ற பூமி காத்திடுவோம்!
  


Comments

Post a Comment

Popular posts from this blog

Report of my Exploratory Research

My experience during this pandemic situation

GRADATION ON ENGLISH TEXT BOOKS OF CLASS III(TAMILNADU)